siruppiddy nilavarai.com navarkiri.net

July 3, 2020

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மங்கிப் போன கைப்பேசியை மாற்றலாமாம்.

முதல்முறையாக செல்போன் வாங்கும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்ல முடியுமா? அதுவும் சொந்த சம்பாத்தியத்தில் வாங்குகிறோம் எனில் இன்னும் வேற லெவல். சந்தையில் இருக்கும் எந்த ப்ராண்டை வாங்கினாலும் ஏதோ தன்னிடம் மட்டுமே இந்த மாடல், இந்த கம்பெனியின் போன் இருப்பது 
போல் உணர்வோம்.
போன் வாங்கியதை விட சிலர் இதற்கு பேக்கவரை தேடி தேடி வாங்குவார்கள். அதுவும் பளிச்சென இருக்கும் கலர் தான் இப்போது எல்லோருக்கும் பிடிக்கிறது. இதற்காகவே ஆயிரம் இரண்டாயிரம் போட்டு பேக்கவர் வாங்குபவர்கள் ஏராளம். இப்படி
 எல்லாமே பார்த்து பார்த்து வாங்கியிருப்போம், ஆனால் அடுத்த ஒரு மாதமே அதன் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். கண்டிப்பாக போனை விட்டு பிரிந்து இருக்கமாட்டோம், எப்போதும் கையில்
 தான் இருக்கும்.
ஆனால் அது படும்பாடு? பாத்ரூமிற்குள் போன் யூஸ் செய்பவர்கள், கண்ட இடங்களில் அதை வைத்துவிட்டு அதனை மீண்டும் குழந்தைகளிடம் கொடுப்பதையெல்லாம் என்ன சொல்வது? இப்படி வீட்டில் உள்ள பாத்ரூமில் ஆரம்பித்து, வெளியே போகும் போது டீக்கடை, உணவகம் என அந்த இடங்கள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ அப்படியே செல்போனை 
வைத்து விடுவோம்.
ஆயிரம் இரண்டாயிரம் போட்டு வாங்கிய செல்போன் கவரை மற்றவர்கள் தொடவே அருவருப்புபடும் அளவிற்கு கலர் மாறியிருக்கும். இதனால் உடனே என்ன செய்வோம்? பழைய கவரை தூக்கிப்போட்டு, புதியதை வாங்கிவிடுவோம். புதிதாக வரும் செல்போன் கவருக்கும் சில மாதங்களில் இதே நிலைதான். ஆனால் காசை செலவு செய்யாமலே, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பழைய செல்போன் கவரை
 புதியதாக மாற்றலாம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
#mobileaccessories: மேற்கண்ட காணொளியில் உள்ளது போல் முயற்சி செய்யும் போது, பெரிதாக மாற்றம் இல்லை என்றும் அதே செயலை மற்றொரு முறை செய்யும் போது நல்ல ரிசல்ட் கிடைப்பதாக முயற்சி செய்தவர்கள் கூறியுள்ளனர்
. இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


June 26, 2020

கைப்பேசி விரைவாக சார்ஜ் ஆகி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க வழிகள்

செல்போனை இரவு நேரத்தில் சார்ஜ் செய்யும் போது விரைவில் மின்னேற்றம் ஆகலாம். குறிப்பாக பிளைட் மோடில் போடும்போது, செல்போனின் அனைத்துவித செயல்களும் நிறுத்தப்பட்டு விரைவில் சார்ஜ் செய்யப்படும். உங்களது எண்ணிற்கு அதிகமான
 அழைப்புகள் வருமே ஆயின், இந்த செயலை இரவில் மட்டுமே செயல்படுத்துவது நல்லது. போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷனை நீக்குவதாலும் ஓரளவு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.
சிலர் இரவு முழுக்க செல்போனை 
சார்ஜ் செய்வதுண்டு. இப்போது வரும் செல்போன்களில், ஒருமுறை தேவையான ஆற்றலை சேமித்த பின்னர் தானகவே நிறுத்திக்கொள்ளும்படி சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் செல்போன்களுக்கு எந்தவித 
பாதிப்பும் வராது.
இருப்பினும் மின் இணைப்பு தனது வேலையை தொடர்ந்து செய்வதால் மின்னாற்றல் வீணாகும். கைபேசியின் தரத்தை பொறுத்தே இந்த நிலை மாறுபடுகிறது. அதிகப்படியாக பேட்டரியின் ஆயுட்காலம்
 பாதிக்கப்படலாம்
மற்றொரு ஆபத்து என்னவென்றால், சார்ஜரில் உள்ள மின்மாற்றியில்(transformer) இரண்டு காயில்கள் இருக்கும். ஒன்று மின் இணைப்புடனும் மற்றொன்று செல்போனுடனும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். மின் தூண்டுதல் விதிப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மின்னூட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். ஸ்விட்சை ஆப் செய்திருந்தாலும் சில மணித்துளிகள் ஒரு காயிலில்
 மின்னுட்டம் இருக்கும்.
இந்தநிலையில் செல்போன் கனெக்ட் செய்திருக்கும் போது, பேட்டரியின் ஆயுட்காலம் குறையலாம். ஸ்விட்சை ஆப் செய்தாலும் மறக்காமல் செல்போனை டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதனால் என்னதான் தரமான பேட்டரியாக இருந்தாலும், மற்ற மின் சாதன பொருட்கள் 
பாதிப்பிற்கு உள்ளாகலாம்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம் எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்கள்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு
.4,13,22, 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.
குண அமைப்பு:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு 
இரண்டாக பேசுவார்கள்.அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு
 கொண்டவர்களாக இருப்பார்கள்.
எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல
 எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான
 பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது.
 எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே 
இவர்கள் எதிலும், சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது
. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு 
மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.உடலமைப்பும், ஆரோக்கியமும்:நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர
 உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய
 கால்கள் உடலுக்கு கேற்றபடி
 இல்லாமல் குறுகலாக இருக்கும்.மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல 
உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு 
போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.குடும்ப வாழ்க்கை:நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை 
ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே
 கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக 
அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ
 பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும், கவனமுடன் நடந்து கொண்டால், இவர்களின் குடும்ப
 வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.பொருளாதாரம்: நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால், யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும்
 ஆற்றலும் இருக்கும்.
தொழில்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு
 உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும், பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை
 கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.நண்பர்கள், பகைவர்கள்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு 
நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.ராகுவுக்குரிய காலம்:ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும்
 செய்யாதிருப்பது நல்லது.
ராகுவுக்குரிய திசை:தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்:நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் 
உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு
 உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.பரிகாரங்கள்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து
 அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்ட திகதி : -1,10,19,28, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்,
அதிர்ஷ்ட திசை -கிழக்கு, அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, அதிர்ஷ்ட கல் – கோமேதகம், அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


May 1, 2019

ஓர் முக்கியமான செய்தி விண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 காணப்படுகின்றது.இவ் இயங்குதளத்தினை கணினியில் நிறுவுவதற்கு 16GB தொடக்கம் 
20GB வரையான சேமிப்பு வசதி தேவைப்பட்டது.இந்நிலையில் விண்டோஸ் 10 புதிய பதிப்பு ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம்
 வெளியிடவுள்ளது.இப் பதிப்பு எதிர்வரும் 
மே மாதம் அறிமுகம் செய்யப்படுகின்றது.இப் புதிய பதிப்பினை கணினியில் நிறுவுவதற்கு மேலும் அதிக 
இட வசதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 30GB வரை இடவசதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பதிப்பானது 1903 அல்லது 19H1 என 
அழைக்கப்படும் என தெரிகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


January 10, 2019

வருகிறது சாம்சங்? ரவுண்டு கட்டும் சியோமி, ஒப்போ, விவோ!

பொதுவாகவே பண்டிகை என்றால் அதிகம் கல்லாகட்டுவது ஸ்மார்ட்போன் நிறுவாங்கள்தான். தள்ளுபடி விற்பனை, கேஷ்பேக், இலவசங்கள் என பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் மீது 
ஆஃபர் வழங்கப்படும். 
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு தென் கொரிய நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் எம்20 ஆகிய போன்கள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இரண்டு மாடல் ஸ்மரட்போன்களும் பட்ஜெட் ரகங்கள்தான். 
தற்போதெல்லாம் பட்ஜெட் என்றாலே ஜியோமி, ஒப்போ, விவோ போன்ர பிரண்டுகள்தான் நினைவிற்கு வருகிறது. அதுவும், சாம்சங் நிறுவனத்தின் முக்கிய போட்டியாக இருப்பது
 சியோமி நிறுவனம். 
கடந்த தீபாவளி விற்பனையின் போதுகூட சியோமி ஸ்மார்ட்போன்களே அதிகம் விற்பனை ஆனாது. இதனால், இந்த முரை சாம்சங் தனது விறபனியில் தாக்குபிடிக்குமா என்ற கேள்வி
 எழுந்துள்ளது. 
சாம்சங் வெளியிடும் கேலக்சி எம் 10 மாடல் போன் ரூ.9,500 மற்றும் எம்20 ரூ.15,000 என்ற விலையில் விற்பனையாகும். இவை தவிர எம்30 மாடலும் வெளியாக உள்ளது என தெரிகிறது. 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


November 6, 2018

மடிக்க கூடிய மோபைல் போன் வந்து விட்டது ஆப்பிள் சாம் சுங் அதிர்ச்சியில்

பேர்சை போல மடித்து வைக்க கூடிய மோபைல் போனை, சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெரும் ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள்
 மடிக்க கூடிய மோபைல் போனை செய்து பாவனையில் விட பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த 2 நிறுவனங்களுக்கும் தண்ணி காட்டி, சீன நிறுவனம் தற்போது இதுபோன்ற மோபைல் போனை முதல் தடவையாக பாவனையில்
 விட்டுள்ளார்கள்.
இதன் காரணத்தால் ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் வெகு விரைவில் தாமும் தமது தயாரிப்பை வெளியே விடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


May 3, 2018

அறிமுகமாகிறது வாட்ஸ்அப் இல் புதிய வசதி!-

குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடந்த அந்நிறுவன கூட்டத்தில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலம் 4 பேர் பேச முடியும் என கூறப்படுகிறது.
எனினும், இந்த வசதி எப்போது அறிமுகமாகும் என்பதை, அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதேபோல், பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில், வாட்ஸ் அப் செயலியில் புதிய ஸ்டிக்கர்களை விரைவில் பார்க்கலாம்.
உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை 100 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் 20 கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>