இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கையின் மனித உரிமைகள் ஆணையாளர் ப்ரதீபா மஹானாமஹேவா, பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 2ம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகளின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வேண்டாம் என்று கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இலங்கையின்உண்மை தன்மையைஅறிந்துக் கொள்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக செயற்குழுவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக,இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள், நீதித்துறை மற்றும் ஊடகத்துறைக்கான சுதந்திரம் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment