siruppiddy nilavarai.com navarkiri.net

April 2, 2013

காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்


காங்கிரஸின் கருத்திற்கு ஜெயலலிதாவின் பதில், நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகின்றபோது சில கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார்.
அப்போது உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார். கூடவே, விஜயதாரணியும் ஆமாம் மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார். வேறு சில உறுப்பினர்கள் அப்போது குறுக்கிட்டு இது வரலாறு, வரலாற்று உண்மை என்றார்கள். அப்போது உறுப்பினர்கள் பிரின்சும், விஜயதாரணியும், மகாத்மா காந்தி இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்கள். ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை கையிலே வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று நான் பேசாமல் இருந்தேன்.
மகாத்மா காந்தி 30.1.1948 அன்று கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நான் முன்பு, அதாவது 29.1.1948 அன்று காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வரைவு சட்டத் திட்ட விதிகளை எழுதி அவர் அனுப்பினார். இது மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 7.2.1948 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா ஜூகல் கிஷோர் என்பவரால் வெளியிடப்பட்டது. இதுபற்றிய புத்தகம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இந்தப் புத்தகத்திற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி முன்னுரை எழுதி இருக்கிறார்.
மகாத்மா காந்தி தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ற இந்த காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று எழுதி இருக்கிறார். ஆகவே, காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல் அவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் தக்க ஆதாரம் என்றார்
 

No comments:

Post a Comment