siruppiddy nilavarai.com navarkiri.net

February 15, 2013

இங் பூன் கே குற்றமற்றவர்,,,,,,,,



தீர்ப்புக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் திரு இங் பூன் கே, அவரது மனைவி இருவரையும் பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவின் முன்னாள் தலைவர் இங் பூன் கே எந்தவித ஊழ­லி­லும் ஈடு­ப­ட­வில்லை எனக் கூறி, அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டி­லி­ருந்து அவரை முழுமை­யாக விடுதலை செய்­தி­ருக்­கிறார் மாவட்ட நீதிபதி சிவ­சண்­மு­கம். 46 வயது இங், அர­சாங்கக் குத்­தகை­கள் வழங்­கு­வ­தில் சலுகை காட்ட சிசிலியா சூ என்­ப­வ­ரி­ட­மி­ருந்து நான்கு முறை பாலியல் சலுகை­கள் பெற்றார் என்று அவர் மீது வழக்­குத் தொட­ரப்­பட்­டி­ருந்தது. ஆனால் அதில் ஊழல் சம்பந்தப்­ப­ட­வில்லை என நீதிபதி சிவ­சண்­மு­கம் தீர்ப்­ப­ளித்­தார். குமாரி சிசிலியா சூவி­ட­மி­ருந்து பாலியல் சுகம் அனு­ப­வித்­த­தற்கு தம்­மி­டம் எந்த உள்­நோக்­கமோ, ஊழல் புரிய வேண்டும் என்ற எண்ணமோ இல்லை என்ற திரு இங்கின் சாட்­சி­யத்தை நீதிபதி ஏற்­றுக் ­கொண்டார். மேலும், இங்கை ஊழல் புரியத் தூண்­டு­வதற்­கா­கவே அவ­ருக்கு வாய் வழி உட­லு­றவு வழங்க சிசிலியா முன்­வந்தார் என்பதை தம்மால் நம்ப முடி­ய­வில்லை என்றும் திரு சிவ­சண்­மு­கம் தமது தீர்ப்­பில் கூறினார்.

No comments:

Post a Comment