முதல்முறையாக செல்போன் வாங்கும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்ல முடியுமா? அதுவும் சொந்த சம்பாத்தியத்தில் வாங்குகிறோம் எனில் இன்னும் வேற லெவல். சந்தையில் இருக்கும் எந்த ப்ராண்டை வாங்கினாலும் ஏதோ தன்னிடம் மட்டுமே இந்த மாடல், இந்த கம்பெனியின் போன் இருப்பது
போல் உணர்வோம்.
போன் வாங்கியதை விட சிலர் இதற்கு பேக்கவரை தேடி தேடி வாங்குவார்கள். அதுவும் பளிச்சென இருக்கும் கலர் தான் இப்போது எல்லோருக்கும் பிடிக்கிறது. இதற்காகவே ஆயிரம் இரண்டாயிரம் போட்டு பேக்கவர் வாங்குபவர்கள் ஏராளம். இப்படி
எல்லாமே பார்த்து பார்த்து வாங்கியிருப்போம், ஆனால் அடுத்த ஒரு மாதமே அதன் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். கண்டிப்பாக போனை விட்டு பிரிந்து இருக்கமாட்டோம், எப்போதும் கையில்
தான் இருக்கும்.
ஆனால் அது படும்பாடு? பாத்ரூமிற்குள் போன் யூஸ் செய்பவர்கள், கண்ட இடங்களில் அதை வைத்துவிட்டு அதனை மீண்டும் குழந்தைகளிடம் கொடுப்பதையெல்லாம் என்ன சொல்வது? இப்படி வீட்டில் உள்ள பாத்ரூமில் ஆரம்பித்து, வெளியே போகும் போது டீக்கடை, உணவகம் என அந்த இடங்கள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ அப்படியே செல்போனை
வைத்து விடுவோம்.
ஆயிரம் இரண்டாயிரம் போட்டு வாங்கிய செல்போன் கவரை மற்றவர்கள் தொடவே அருவருப்புபடும் அளவிற்கு கலர் மாறியிருக்கும். இதனால் உடனே என்ன செய்வோம்? பழைய கவரை தூக்கிப்போட்டு, புதியதை வாங்கிவிடுவோம். புதிதாக வரும் செல்போன் கவருக்கும் சில மாதங்களில் இதே நிலைதான். ஆனால் காசை செலவு செய்யாமலே, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பழைய செல்போன் கவரை
புதியதாக மாற்றலாம்.
. இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>
No comments:
Post a Comment